தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்: தொடர் நேரலை

Tamil nadu Election
By Yashini Mar 15, 2026 10:40 AM GMT
Report

தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.  

வேட்புமனுத் தாக்கல் - மார்ச் 30

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் - ஏப்ரல் 6

வேட்புமனு பரிசீலனை - ஏப்ரல் 7

வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - ஏப்ரல் 9  

வாக்குப் பதிவு நாள் - ஏப்ரல் 23

வாக்கு எண்ணிக்கை - மே 4

தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும்.

முதல் இணைப்பு

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் திகதி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.

இந்த 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தேவையான பணிகளை மேற்கொண்டுள்ளது.  

சிறப்பு வாக்காளர் திருத்தம் மூலம் இறந்தவர்கள், இரட்டை பெயர்கள் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்கள் நீக்கப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மேலும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் நேரில் சென்று தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்தது.

மீண்டும் திமுக ஆட்சி: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை

மீண்டும் திமுக ஆட்சி: உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை


மேலும், தேர்தல் ஏற்பாடு பணிகள் குறித்து தலைமை செயலாளர்கள் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு இன்று மாலை 4 மணிக்கு தேர்தல் திகதி அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும், தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட உடன் இன்று மாலையே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்.