12 நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் : தமிழக அரசு அறிவிப்பு
ஒமிக்ரான் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலக நாடுகளிடையே கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் தான் எந்தவொரு நாட்டினாலும் வைரஸ் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை.
ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகையைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஓமிக்ரான் கொரோனா உலகெங்கும் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதனை ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த மத்திய, ,மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை 12 நாடுகளை அதி ஆபத்து கொண்டவையாக வரையறுத்துள்ளது.
பின் வரும் நாடுகளில் ஒமிக்ரான் கோவிட் பரவல் இருக்கலாம் என்பதால் அங்கிருந்து தமிழகம் வரும் பயணிகள் கூடுதல் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பிரிட்டன் உட்பட ஐரோப்பிய நாடுகள், தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், போட்ஸ்வானா, சீனா, மொரிசியஸ், நியூசிலாந்து, சிம்பாப்வே , சிங்கபூர் , ஹாங்காங் , இஸ்ரேல் இடம் பெற்றுள்ளன.
மேலும் தமிழகத்தின் சர்வதேச விமான நிலையங்கள் சென்னை, கோவை, மதுரை திருச்சி, என நான்கு நிலையங்களிலும் தலா ஒரு சுகாதார திட்ட அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள். 1.Rt pcr நெகடிவ் சான்றிதழுடன் தான் விமானத்தில் வந்திருக்க வேண்டும். 2. எனினும் வந்திரங்கிய உடன் மீண்டும் பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்படும்.
3.தொற்று இல்லை எனில் 7 நாட்கள் வீட்டுத் தனிமைப்படுத்தல். 8 ஆம் நாள் மீண்டும் பரிசோதனை. அதிலும் நெகடிவ் வந்தால் தனிமைப்படுத்தல் இல்லை. 4. பாசிட்டிவ் வந்தால் உடனடியாக அவரது மாதிரி மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும். தனி வார்டில் தனிமைப்படுத்தல். மருத்துவ கண்காணிப்பு மற்றும் சிகிச்சை வழங்கப்படும்.
5. ஒமைக்ரான் இல்லை என மரபணு சோதனையில் கண்டறியப்பட்டால் டிஸ்சார்ஜ். இல்லையெனில் தொடர் சிகிச்சை. தொற்று நெகடிவ் வந்தால் மட்டுமே டிஸ்சார்ஜ். இந்த நாடுகள் அல்லாமல் பிற நாடுகளிலிருந்து வருபவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இவர்களில் யாராவது 5% பேருக்கு விமான நிலையத்தில் ஆர் டி பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.