தமிழகத்தில் தேர்தல் அன்று பொது விடுமுறை! தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 23ம் தேதி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொதுவிடுமுறை வழங்கிட தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 2.90 கோடி பெண் வாக்காளர்களும், 2.78 கோடி ஆண் வாக்காளர்கள், 7,656 திருநங்கைகளும் உள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், அனைத்து கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு ஏப்.23-ம் தேதி சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை விட வேண்டும் என தேர்தல் ஆணையம் தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
தினக்கூலி தொழிலாளராக இருந்தாலும் விடுப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
