செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது - நிராகரித்த ஆளுநர்!
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடரக்கூடாது என ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
இலாகா மாற்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைதுசெய்திருக்கும் நிலையில், அவர் உடல்நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால், அவரிடமிருக்கும் இரு முக்கியத் துறைகளை இரு வேறு அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுக்க முடிவுசெய்யப்பட்டது.
அது தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் அனுப்பப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகிய துறைகளை மின்துறையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும்,
ஆளுநர் ஒப்புதல்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை, வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமியிடமும் வழங்க கேட்கப்பட்டது.
அதற்கு தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைக்கு ஆளாகியுள்ள செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் தொடர முடியாது. அவர் அமைச்சர் பதவியில் நீடிக்கவேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்க முடியாது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.