ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு

Government of Tamil Nadu
By Thahir Aug 09, 2022 05:18 AM GMT
Report

ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினம் அன்று காலை 11 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்க ஆணையர் தாரேஸ் அகமது உத்தரவிட்டுள்ளார்.

கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவு 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிராம சபை கூட்டத்தினை அனைத்து ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி சுதந்திர தினத்தன்று நடத்த வேண்டும்.

ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு | Tn Government Order To Village Council Meeting

கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் இடம், நேரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.இதில் உறுப்பினர்களின் வருகையை உறுதி செய்து கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.