இனி இவர்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் - முக்கிய அறிவிப்பு
இலவச பேருந்து பயண அட்டைகளின் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இலவச பயணம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி 5,100-க்கும் மேற்பட்ட வழித்தடங்களை உள்ளடக்கி, 1.7 கோடி பயணிகளுக்கு சேவை வழங்கப்படுகிறது.
மேலும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவிகள், மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட அனைத்து பெண்களும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
காலம் நீட்டிப்பு
மூத்த குடிமக்கள் கட்டணமில்லா பயண டோக்கன்கள் மூலம் இலவசமாக பயணிக்கும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள், சுதந்திரப்போராட்டவீரர்கள்,
தமிழறிஞர்கள் மற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கட்டணமில்லா பயண அட்டைகளை இணையதளம் வாயிலாக பெற்றிடும் வகையில், 07.09.2023 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இதனை செயல்படுத்த, கூடுதல் போதிய கால அவகாசம் தேவைப்படுகின்ற நிலையில், ஏற்கனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் 31/03/2025 வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை, 30/09/2025 வரை மேலும் நீட்டித்து பயணிகள் சிரமமின்றி பயணம் செய்யலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.