சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - விழிபிதுங்கும் தமிழக அரசு

covid19 tn government
By Petchi Avudaiappan Aug 10, 2021 03:28 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் ஒரேநாளில் 1,893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,79,130 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,367 ஆக உள்ளது. மேலும் 1,930 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,24,400 ஆக உயர்ந்துள்ளது.

அதிகப்பட்சமாக கோவையில் 224 பேருக்கும், சென்னையில் 209 பேருக்கும், ஈரோட்டில் 169பேருக்கும், சேலத்தில் 92 பேருக்கும், தஞ்சாவூரில் 97 பேருக்கும், திருவள்ளூரில் 79 பேருக்கும், திருப்பூரில் 71 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.