தமிழகத்தில் குறைந்தது கொரோனா பாதிப்பு - இன்று மட்டும் 23 பேர் பலி

covid19 tngovernment
By Petchi Avudaiappan Aug 09, 2021 02:09 PM GMT
Report

 தமிழகத்தில் ஒரேநாளில் 1,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,77,237 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,340 ஆக உள்ளது. மேலும் 1,886 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,22,470 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 235 பேருக்கும், சென்னையில் 182 பேருக்கும், ஈரோட்டில் 178 பேருக்கும், சேலத்தில் 85 பேருக்கும், தஞ்சாவூரில் 95 பேருக்கும், திருவள்ளூரில் 88 பேருக்கும், திருப்பூரில் 77 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.