தமிழகத்தில் 1,891 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...!
Covid 19
Tn health ministry
By Petchi Avudaiappan
தமிழகத்தில் ஒரேநாளில் 1,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,41,168 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,809 ஆக உள்ளது. மேலும் 2,423 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,81,201 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 183 பேருக்கும், ஈரோட்டில் 141 பேருக்கும், சேலத்தில் 119 பேருக்கும், தஞ்சாவூரில் 90 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.