தமிழகத்தில் 2,404 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...!
Covid 19
Tn government
By Petchi Avudaiappan
தமிழகத்தில் ஒரேநாளில் 2,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,28,806 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,606 ஆக உள்ளது. மேலும் 3,006 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,65,250 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக கோவையில் 270 பேருக்கும், ஈரோட்டில் 175 பேருக்கும், சேலத்தில் 164 பேருக்கும், தஞ்சாவூரில் 171 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.