தமிழகத்தில் குறையாத கொரோனா பாதிப்பு - இன்று எவ்வளவு தெரியுமா?

covid 19 tn government tn health ministry
By Petchi Avudaiappan Aug 06, 2021 03:38 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

தமிழகத்தில் ஒரேநாளில் 1,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 30  பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,260 ஆக உள்ளது. மேலும் 1,908 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,16,938 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 239 பேருக்கும், சென்னையில் 189 பேருக்கும், ஈரோட்டில் 178 பேருக்கும், சேலத்தில் 70 பேருக்கும், தஞ்சாவூரில் 93 பேருக்கும்,திருவள்ளூரில் 98 பேருக்கும், திருப்பூரில் 90 பேருக்கும்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கட்டுப்பாடுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.