தமிழகத்தில் 24 மணி நேரத்தில் 2,775 பேருக்கு கொரோனா பாதிப்பு...!

Covid 19 Tn government
By Petchi Avudaiappan Jul 11, 2021 03:03 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in ஆரோக்கியம்
Report

தமிழகத்தில் ஒரேநாளில் 2,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 25,18,786 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனா பாதிப்பால் இன்று 47 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,418 ஆக உள்ளது. மேலும் 3,188 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,53,061 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 298 பேருக்கும், ஈரோட்டில் 198 பேருக்கும், சேலத்தில் 175 பேருக்கும், தஞ்சாவூரில் 210 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.