2021-22 தமிழக பட்ஜெட் தாக்கல்- வெளியான முக்கிய அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவையில் 2021-22 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக பட்ஜெட்டில் வெளியான முக்கிய அறிவிப்புகள்:
* 1921 ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும்.
*அனைத்து துறைகளின் நடைமுறைகளும் கணினிமயமாக்கப்படும்.
* ஜூன் 3 ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் அன்று செம்மொழி தமிழ் விருது, ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
* பொதுநிலங்களை முறையாக பயன்படுத்த “அரசு நில மேலாண்மை அமைப்பு” அமைக்கப்படும்.
*செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின் கீழ் தமிழ் படைப்புகள் மொழிபெயர்க்கப்படும்
*தொல்லியல் ஆய்வுகளை அறிவியல் முறையில் மேற்கொள்ள ரூ.5 கோடி ஒதுக்கீடு
*தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடியும், தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடியும் நிதி ஒதுக்கீடு
* கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்கப்படும்
*தமிழக காவல்துறைக்கு ரூ.8,930 கோடி, தீயணைப்பு துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு
*தமிழக காவல்துறைக்கு ரூ.8,930 கோடி, தீயணைப்பு துறைக்கு ரூ.405.13 கோடி, நீதித்துறைக்கு ரூ.1,713 கோடி
*சாலை பாதுகாப்பு திட்டத்திற்காக பல்வேறு துறைகளுக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
*வரிமுறையை சீர் செய்வதற்காக சட்ட, பொருளாதார வல்லுநர் குழு அமைக்கப்படும் ஒதுக்கீடு.
*பொதுவிநியோக திட்டத்தின் கீழ் தேவையான இடங்களில் புதிய நியாய விலைக்கடைகள் அமைக்கப்படும்.
*பொது விநியோக திட்டத்தில் உணவு மானியத்திற்காக நிதி ஒதுக்கீடு ரூ.8,437 கோடியாக உயர்வு.
*மேட்டூர், அமராவதி, பேச்சிப்பாறை உள்ளிட்ட அணைகளின் நீர்மட்ட அளவை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த நடவடிக்கை.
*ரூ.111.24 கோடி செலவில் 200 குளங்களின் தரம் உயர்த்தப்படும் -அடுத்த 10 ஆண்டுகளில் ஆயிரம் தடுப்பணைகளும், கதவணைகளும் கட்டப்படும்.
*தமிழக நீர்வள தகவல் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்.
*ரூ.610 கோடியில் நீர்நிலைகள் புரனமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
*தமிழக நீர்வள தகவல் மேலாண்மை அமைப்பு ரூ.30 கோடியில் செயல்படுத்தப்படும்.
*ரூ.610 கோடியில் நீர்நிலைகள் புரனமைப்பு பணிகள் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும்.
*நீர்பாசன திட்டங்களுக்காக ரூ.6,607.17 கோடி ஒதுக்கீடு புதிதாக 6 இடங்களில் மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க ரூ.6.25 கோடி செலவில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
*மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி ஒதுக்கீடு - காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த ரூ.150கோடி நிதி ஒதுக்கீடு
*ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்.
*இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் தமிழகத்தில் அமைக்கப்படும்.
*மாநிலத்திலுள்ள ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த ‘தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்’ உருவாக்கப்படும்.
*ஈர நிலங்களை சார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கும் சேர்த்து ரூ.150 கோடி ஒதுக்கீடு
*5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழைப் பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும்.
*79,395 குக்கிராமங்களில் நாள் ஒன்றுக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை
*1.27 கோடி குடும்பங்களுக்கு வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்யப்படும்.
*குடிநீர் இணைப்பு இல்லாத 83.29 லட்சம் குடும்பங்களுக்கு 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
*தமிழகத்தில் ஜல்ஜீவன் இயக்கத்தை செயல்படுத்த ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
*2021-22 ஆம் நிதியாண்டில் ரூ.8,017.41 கோடி செலவில் 2,89,877 வீடுகள் கட்டப்படும்.
*அடுத்த 5 ஆண்டுகளில் 8,03,924 குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
*கிராமப்புறங்களில் ரூ.400 கோடி செலவில் தூய்மை பாரத இயக்கம் செயல்படுத்தப்படும்.
*ஊரக வேலை உறுதித்திட்ட பணி நாட்களை 100 இல் இருந்து 150 ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.
*ஊரக வேலை உறுதித்திட்ட ஊதியத்தை ரூ.300ஆக உயர்த்த வலியுறுத்தப்படும்.
*அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு
*சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி நடப்பாண்டு முதல் மீண்டும் ரூ.3 கோடி அளிக்கப்படும்.
*நமக்குநாமே திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு
*மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி சிறப்பு கொரோனா கடன் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்க உறுதி செய்யப்படும்.
*36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.71 கோடி செலவில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்.
*அனைத்து நகரங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையில் நடைபாதைகள் அமைக்கப்படும்.
*அனைத்து நகரங்களிலும் 30 மீட்டர் இடைவெளியில் தெருவிளக்குகள் அமைக்கப்படும்.
*ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
*TUFIDCO திருச்சியில் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகம் அமைக்கப்படும்.
*தமிழகத்தில் சீர்மிகு நகரங்களின் திட்டத்திற்கு ரூ.2,350 கோடியும், அம்ருத் திட்டத்திற்கு ரூ.1,450 கோடியும் ஒதுக்கீடு
*நடப்பாண்டு முதல் ரூ.1,000 கோடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
*ஊரக புத்தாக்க திட்டம் சீரமைக்கப்பட்டு ரூ.212.69 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
*சென்னையில் 3 இடங்களில் மேம்பாலங்கள் கட்ட ரூ.335 கோடி ஒதுக்கீடு - சிங்கார சென்னை 2.0 திட்டம் தொடங்கப்படும்.
*சென்னையில் 3 இடங்களில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2,056 கோடி நிதி ஒதுக்கீடு
*கொசஸ்தலை ஆற்றில் வெள்ளநீர் வடிகாலுக்கு ரூ.87 கோடி நிதி ஒதுக்கீடு.
*சென்னையிலுள்ள நீர்வழிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டம் ரூ.2,371 கோடியில் செயல்படுத்தப்படும்.
*நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கீடு
*அடுத்த 10 ஆண்டுகளில் மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட தலைமையகத்துடன் இணைக்க 2,200 கி.மீ.க்கு 4 வழிச்சாலைகள் அமைக்கப்படும்.
*நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் தரம் உயர்த்தப்படும்.
*குடிசை மாற்று வாரியத்துக்கு ரூ.3,954.44 கோடி ஒதுக்கீடு
*நகர்புற ஏழைகளுக்கான வீட்டுவசதி தேவையை உறுதி செய்ய 9,53,446 குடியிருப்புகள் உருவாக்கப்படும்.
*வீட்டு வசதித்துறையில் உலக வங்கி திட்டங்களுக்கு ரூ.320.40 கோடி, ஆசிய வங்கி திட்டங்களுக்கு ரூ.171 கோடி ஒதுக்கீடு
*பேருந்தில் மகளிர் இலவசமாக பயணம் செய்ய ரூ.703 கோடி ஒதுக்கீடு - ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்க ரூ.623.59 கோடி நிதி ஒதுக்கீடு
*அடுத்த 4 ஆண்டுகளில் கோடம்பாக்கம் - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும்.
*சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரையிலான மெட்ரோ பணிகள் விரைவில் தொடங்கும்.
*மதுரையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ஆய்வு செய்யப்படும்.
*வேளாண்மைக்கான இலவச மின்சாரம், வீட்டு மின்சார மானியத்திற்காக ரூ.19,872.77 கோடி நிதி ஒதுக்கீடு
*பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ரூ.32,599 கோடி நிதி ஒதுக்கீடு
*மாநில கல்விக்கொள்கையை உருவாக்க உயர்மட்டக்குழு அமைக்கப்படும்.
*அடிப்படை கல்வியறிவு, கணித அறிவை உறுதி செய்ய ரூ.66.70 கோடியில் எண்ணும் எழுத்தும் இயக்கம் செயல்படுத்தப்படும்.
*உயர்கல்வித்துறைக்கு ரூ.5,369 கோடி நிதி ஒதுக்கீடு
*நடப்பாண்டில் தமிழகத்தில் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும்.
*865 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியிலும், ரூ.10 கோடியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்.
*அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து தமிழ்நாடு ஆளில்லா விமானக்கழகம் உருவாக்கப்படும்.
*மருத்துவம் மற்றும் குடும்பநலத்துறைக்கு ரூ,18,933.20 கோடி ஒதுக்கீடு
*டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கீடு.
*அரசு ஊழியர்களுக்கான பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிப்பு
*தமிழ்நாடு சித்தா பல்கலைக்கழகம் அமைக்க முதற்கட்டமாக ரூ.2 கோடி ஒதுக்கீடு
*அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்திற்கு மானியம் வழங்க ரூ.215.64 கோடி நிதி ஒதுக்கீடு
*நெய்வேலியில் நிலக்கரி நிறுவனத்துடன் இணைந்து புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.
*அதிகமான முதலீடுகளை ஊக்குவிக்க புலம்பெயர் தமிழர்களுடனான உறவு வலுப்படுத்தப்படும்.
*தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி முதலீட்டை ஊக்குவிக்க ரூ.1,000 கோடியில் அறைகலன்கஊக்கான சர்வதேச பூங்கா அமைக்கப்படும்.
சென்னை நந்தம்பாக்கத்தில் ரூ.165 கோடி செலவில் நிதிநுட்ப நகரம் உருவாக்கப்படும்.
*காஞ்சிபுரத்தில் மருத்துவ சாதன பூங்கா, திருவள்ளூரில் மின் வாகனப் பூங்கா, ராணிப்பேட்டையில் தோல் பொருட்கள் உற்பத்தி பூங்கா, மணப்பாறை, தேனி, திண்டிவனத்தில் உணவுப் பூங்கா ஆகியவை அமைக்கப்படும்.
*திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகையில் புதிதாக சிப்காட் தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும்.
*புரட்சித்தலைவர் மதிய உணவு திட்டத்துக்கு ரூ.1,725 கோடி ஒதுக்கீடு.
*பழனி கோவில் மூலம் சித்த மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டு சித்த மருத்துவமுறை மேம்படுத்தப்படும்.
*ஆதி திராவிடர், பழங்குடியினர் சிறப்பு கூறுகள் திட்டத்திற்காக ரூ.14,496 கோடி ஒதுக்கீடு
*இலவச பள்ளிச்சீருடைகள் வழங்க ரூ.409 கோடி ஒதுக்கீடு
*ஆதி திராவிடர், பழங்குடியினர் நலனுக்காக ஒட்டுமொத்த நிதி ரூ.4,142 கோடி ஒதுக்கீடு
*அறநிலையத்துறையைச் சேர்ந்த 187.91 ஏக்கர் கோவில் நிலங்கள் 100 நாட்களுக்குள் மீட்பு மகளிர் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்க ரூ.762.23 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
*8 தமிழக சுற்றுலாத்துறைக்கு ரூ.187 கோடி ஒதுக்கீடு பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.490 கோடியில் தலா 1.81 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்படும்.
*இளைஞர் நலன் மற்றும் விளையாட்டி மேம்பாட்டிற்காக ரூ.225 கோடி நிதி ஒதுக்கீடு
*ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ரூ.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.
* இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் தகுதியான குடும்பங்களை கண்டறிந்து அமல்படுத்தப்படும்.
*மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்.
*நிலுவையிலுள்ள வரி ரூ.28 ஆயிரம் கோடியை வசூலிக்க ‘சமதான் திட்டம்’ நடைமுறைப்படுத்தப்படும்.
*பெட்ரோல் மீதான வரிக்குறைப்பு காரணமாக லிட்டருக்கு ரூ.3 குறைக்க ஆணை.
*நடப்பு நிதியாண்டின் மொத்த வருவாய் ரூ.2,60,409 கோடி, செலவினம் ரூ.2,61,188 கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ.58,692 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த வரவு, செலவு திட்ட மதிப்பீட்டில் ரு.77.88% கல்வி தொடர்பன திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுள்ளது.