முதலமைச்சரை புகழ்ந்து பேசல..காரியம் நடக்கனும் - எம்.எல்.ஏ பேச்சால் சட்டப்பேரவையில் சிரிப்பலை..!
சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது.
இதையடுத்து சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தோணமடு அருகே புதிய நீர் தேக்கம் அமைக்க வாய்ப்புள்ளதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தோணிமடு பள்ளத்தில் நீர் தேக்கம் அமைக்கும் திட்டம் அரசால் ஆய்வு செய்யப்பட்டது.
இத்திட்டமானது பொருளாதார ரீதியாகவும்,தொழில்நுட்ப ரீதியாகவும் சாதகமற்று உள்ளதால் இத்திட்டம் செயல்படுத்த முடியாமல் கைவிடப்பட்டதாக கூறினார்.
இதையடுத்து பேசிய எம்.எல்.ஏ சதாசிவம் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஒரு லட்சத்து பத்தாயிரம் ஏக்கர் பயனடையும்,என்று கூறி தொடர்ந்து பேசினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு கேள்விக்கு வாங்க என கூறினார் அதையடுத்து இத்திட்டத்தை நிறைவேற்றி கொடுக்குமாறு கூறினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் எனக்கு என்ன தோணிமடுவ கட்ட கூடாதுன்னா கேட்டோம்.அணை கட்டுவதற்கு சில விதிமுறைகள் இருக்கு. எம்.எல்.ஏ-வின் ஆதங்கம் புரிகிறது.செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது எனவே இத்திட்டத்தை மீண்டும் பரிசீலிப்பதாக கூறினார்.
இதையடுத்து பேசிய எம்.எல்.ஏ சதாசிவம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் 5 மாவட்டத்திற்கு தானிய பற்றாக்குறை இருக்கும் நம்முடைய முதலமைச்சரை பெருந்தலைவர் காமராஜர் போல நினைக்கிறேன் அந்த மக்களை காப்பாற்றுவதற்கு,
பின்பு புகழந்து பேசுவதாக நினைக்காதீங்க மன்னிக்கவும்,காரியம் நடக்கனும் என்றவுடன் சட்டசபையில் சிரிப்பலை எழுந்தது.