தேர்வில் ஆள்மாறட்டம்; திருவாரூர் பாஜக தலைவர் கைது - போலீசார் அதிரடி
இளங்கலை பட்ட தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட புகாரில் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேர்வில் ஆள்மாறட்டம்
பி.ஏ., பொலிட்டிக்கல் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு தேர்வு நேற்று மதியம் நடந்தது. அப்போது, பாஸ்கர் என்பவர் தேர்வு எழுத வந்தார். தேர்வு எழுதுபவர்களின் அடையாள அட்டை மற்றும் நுழைவு சீட்டு ஆகியவற்றை தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் பரிசோதனை செய்தனர்.
அப்போது, பாஸ்கர் என்று சொன்ன நபருக்கும், அடையாள அட்டை மற்றும் தேர்வு அறை நுழைவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்துக்கும் வித்தியாசம் இருந்தைக் கண்டுபிடித்தனர்.
இது குறித்து தேர்வு நடத்தும் அலுவலருக்கு கண்காணிப்பாளர் தகவல் கொடுத்தார். இதனையடுத்து, நடைபெற்ற விசாரணையில், தேர்வு எழுத வந்த நபர் திருவாரூர் சபாபதி முதலியார் தெருவை சேர்ந்த திவாகரன் (29) என்பதும், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் என்பவருக்காக திவாகரன் தேர்வு எழுத வந்ததும் தெரிய வந்தது.
திருவாரூர் பாஜக தலைவர் கைது
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் ஆள்மாறாட்ட வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இரண்டு பேர் கைதான நிலையில், பாஸ்கரையும் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.