துணி துவைக்க சென்ற இடத்தில் துயரம்! என்ன நடந்தது 5 பெண்களுக்கு?

death tiruvallur
By Anupriyamkumaresan Jul 14, 2021 09:51 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

திருவள்ளூர் அருகே துணி துவைக்க சென்ற இடத்தில் 3 சிறுமிகள் உட்பட 5 பேர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

துணி துவைக்க சென்ற இடத்தில் துயரம்! என்ன நடந்தது 5 பெண்களுக்கு? | Tiruvallur 5 Members Death In Lake

திருவள்ளூர் மாவட்டம் புதுக்கும்மிடிபூண்டி அங்காளம்மன் கோவில் அருகே குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயில் குளத்தில் தான் அப்பகுதி மக்கள் வழக்கமாக துணி துவைத்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று காலை 3 சிறுமிகள் மற்றும் 2 பெண்கள் துணி துவைக்க சென்றுள்ளனர். அப்போது அனைவரும் துணி துவைத்து கொண்டிருந்த போது இரண்டு சிறுமிகள் குளத்தில் இறங்கி விளையாடி கொண்டிருந்தனர்.

துணி துவைக்க சென்ற இடத்தில் துயரம்! என்ன நடந்தது 5 பெண்களுக்கு? | Tiruvallur 5 Members Death In Lake

அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு சிறுமிகளும் குளத்தில் உள்ள சேற்றில் சிக்கிகொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து மற்றொரு சிறுமியை அவர்களை காப்பாற்ற முயன்று சிக்கி கொண்டுள்ளார்.

துணி துவைக்க சென்ற இடத்தில் துயரம்! என்ன நடந்தது 5 பெண்களுக்கு? | Tiruvallur 5 Members Death In Lake

இவர்கள் மூவரும் கத்தி கூச்சலிடவே, அந்த 2 பெண்களும் இவர்களை காப்பாற்ற குளத்தில் இறங்கியுள்ளனர்.

துணி துவைக்க சென்ற இடத்தில் துயரம்! என்ன நடந்தது 5 பெண்களுக்கு? | Tiruvallur 5 Members Death In Lake

ஆனால் 5 பேரும் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி தண்ணீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலங்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.