‘நீ இல்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே..’ - காதல் மனைவி இறந்ததால் விபரீத முடிவை எடுத்த இளைஞன்!

By Swetha Subash May 24, 2022 07:18 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

மனைவி இறந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பெரியகரம் அடுத்த சுண்ணாம்புக் கல்லைப் பகுதியில் வசிப்பவர் பெருமாள் ஸ்ரீதேவி மகள் சங்கீதா (18). குனிச்சி அடுத்த பெரியார் வட்டம் பகுதியில் வசிப்பவர் சித்தன் விஜயா மகன் மேகநாதன் (24).

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாங்குப்பம் அடுத்த நரிய நேரி கிராமத்தில் வசிக்கும் முருகம்மாள் மகன் திருப்பதிக்கு (24) திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே திருப்பதியுடன் வாழ்ந்த சங்கீதா மீண்டும் தன்னுடைய முன்னாள் காதலன் மேகன்நாதனை மறக்க முடியாமல் அவருடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடி பெங்களூரு பகுதிக்குச் சென்று வாழ்ந்து வந்துள்ளார்.

‘நீ இல்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே..’ - காதல் மனைவி இறந்ததால் விபரீத முடிவை எடுத்த இளைஞன்! | Tirupathur Youth Commits Suicide After Wife Dies

இந்நிலையில் திருப்பதியின் வீட்டாரும் மேகநாதனின் வீட்டாரும் சமரசம் பேசி வேறு வழி இல்லாமல் சங்கீதாவை முன்னாள் காதலன் மேகநாதனுடன் அனுப்பி வைத்துள்ளனர்.

கடந்த 6 மாதங்களாக இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் சங்கீதா கர்ப்பம் தரித்து மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை திடீரென சங்கீதாவிற்கு வலிப்பு வந்துள்ளது. உடனடியாக சங்கீதாவை உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி சங்கீதா இறந்துள்ளார். பெங்களூரு பகுதியில் மேஸ்திரி வேலை செய்வதற்காக சென்றிருந்த கணவன் மேகநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நீ இல்லாமல் போனால் வாழ்க்கை இல்லை கண்ணே..’ - காதல் மனைவி இறந்ததால் விபரீத முடிவை எடுத்த இளைஞன்! | Tirupathur Youth Commits Suicide After Wife Dies

ஆனால் தன்னுடைய மனைவியை மருத்துவமனைக்கு சென்று பார்க்காமலேயே மனைவி இறந்த சோகத்தில் மனம் உடைந்து திருப்பத்தூர் அடுத்த மொளகாரம்பட்டி ரயில் நிலையம் அருகே அதிகாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் மேகநாதன்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியை இழந்த சோகத்தில் கணவனும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.