திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த மத்திய அமைச்சர் - கொரோனாவில் இருந்து நாட்டு மக்கள் குணமடைய பிரார்த்தனை!
minister
temple
piyush goyal
tirupathi
By Anupriyamkumaresan
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் சுவாமி தரிசனை செய்து கொண்டார்.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் இன்று காலை திருப்பதி வந்தடைந்தார்.
இதனை தொடர்ந்து சிறப்பு தரிசனம் மூலமாக சுவாமியை தரிசனம் செய்தார்.
இதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டு மக்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைவில் குணமடையவும், நலமுடன் இருக்க வேண்டும் எனவும் சுவாமியிடம் பிரார்த்தனை செய்து கொண்டதாக தெரிவித்தார்.