காயமடைந்த பெண் எஸ்.ஐ.யிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

M. K. Stalin
By Irumporai Apr 23, 2022 06:05 AM GMT
Report

நெல்லையில் மர்ம நபரால் தாக்கப்பட்ட பெண் காவல் உதவி ஆய்வாளரை முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

நெல்லையில் , சுத்தமல்லி அருகே கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் உதவி ஆய்வாளரை மர்ம நவர் ஒருவர் கத்தியால் குத்தி சரமாரி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மார்க்ரெட் கிரேசி. இவர் நேற்றிரவு சுத்தமல்லி அடுத்த பழுவூரில் கோயில் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஆறுமுகம் என்பவர் திடீரென ஆய்வாளர் மார்க்ரெட் கிரேசியை சரமாரியாக கத்தியால் குத்தி உள்ளார். இதில் ஆய்வாளர் மார்கரெட் கிரேஸியின் கன்னம், கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பெண் எஸ்.ஐ.யிடம் தொலைபேசியில்  நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..! | Tirunelveli Man Police Sub Inspector Cm Stalin

இதையடுத்து உடனடியாக அவரை மீட்டு சக காவல்துறையினர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து காவல் ஆய்வாளர் மீது கொடூர தாக்குதல் நடத்திய ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

பெண் எஸ் .ஐ மீது கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் நெல்லையில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ள நிலையில் ,தக்கப்பட்ட எஸ்.ஐ மார்க்ரெட் தெரசாவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

காயமடைந்த சகோதரி மார்க்ரெட் தெரசாவுக்கு உயர் மருத்துவ சிகிச்சை தர அறிவுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.பெண் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.