டிண்டர் அப்பில் தங்கையினை தேடிய இளைஞர் : இணையத்தில் வைரலான ஒரு பாசமலர் கதை

By Irumporai Aug 10, 2022 08:13 AM GMT
Report

டிண்டர் அப்பில் இளைஞர் ஒருவர் தனக்கு பாசமான தங்கை வேண்டும் என கேட்டிருந்தது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது .

தங்கையினை தேடிய அண்ணன்

டிண்டர் என்பது டேட்டிங் அப்களுள் ஒன்று அதில் பொதுவாக மக்கள் அனைவரும் நட்பாக பழகி பேசி பார்த்து பின் காதலிப்பதற்காக பயன்டுத்துவார்கள் என்பதுதான் நாம் கேள்விபட்டது.

டிண்டர் அப்பில் தங்கையினை தேடிய இளைஞர் :  இணையத்தில் வைரலான ஒரு  பாசமலர் கதை | Tinder To Find Sister Raksha Bandhan

இந்த நிலையில் டிண்டர் அப்பில் மும்பையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனக்கு பாசமான தங்கை வேண்டும் என்று கேட்டு பாசமான இரண்டு அன்பான சகோதரிகளைன்பெற்ற நெகிழ்ச்சி சம்பவமும் அரங்கேறியுள்ளது. 

மும்பையை சேர்ந்த இந்த நபருக்கு ரக்ஷாபந்தனை கொண்டாடுவதற்கு தன்னகு ஒரு தங்கை இல்லை என்று பல வருடமாக ஏங்கியுள்ளார்.

டிண்டரில் கிடைத்த பாசமலர்

ரக்ஷாபந்தன் அன்று தங்கை வேண்டும் என கடந்த ஆண்டு தனது சமூகவலைதங்களில் ரக்ஷாபந்தன் பண்டிகைக்கு ஒரு வாரம் முன்பே தனது bioவில் தங்ககை வேண்டும் என பல முறை பதிவு செய்துள்ளார் , ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

டிண்டர் அப்பில் தங்கையினை தேடிய இளைஞர் :  இணையத்தில் வைரலான ஒரு  பாசமலர் கதை | Tinder To Find Sister Raksha Bandhan

ஆகவே இந்த முறை தனக்கு தங்கைவேண்டுமென்று டிண்டர் அப்பில் பதிவிட அப்பின் மூலம் இரண்டு சகோதரிகள் கிடைத்துள்ளனர் , இதனை ரெடிட் தளத்தில் தெரிவித்துள்ள அந்த இளைஞர்   "நன்றி டிண்டர்" நான் பதிவுசெய்ததால், தற்போது எனக்கு 2 சகோதரிகள் கிடைத்துள்ளனர் .

இந்த முறை நாங்கள் மூவரும் ரக்ஷாபந்தனை இனைந்து கொண்டாடப்போகிறோம், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பொதுவாக சமூகவலைத்தளத்தை பயன்படுத்தி குற்ற செயல்கள் நடக்கும் இந்த சமயத்தில் பாசமான தங்கைகளை டிண்டர் அப் மூலம்பெற்றது இணையவாசிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.