தற்கொலை அல்ல… கொலை? - டான்ஸர் ரமேஷ் குடும்பத்தினர் கூறிய திடுக்கிடும் தகவல்...!

TikTok
By Nandhini Jan 29, 2023 02:10 AM GMT
Report

தற்கொலை அல்ல, கொலை என்று டான்ஸர் ரமேஷ் குடும்பத்தினர் பல திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளனர்.

டிக்டாக் பிரபலம் டான்ஸர் ரமேஷ் தற்கொலை

டிக்டாக் மூலம் பிரபலமானவர்தான் டான்ஸர் ரமேஷ். இவர் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடினமாடியுள்ளார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் ரமேஷ் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், சமீபத்தில் நடிகர் அஜீத் நடிப்பில் வெளியான துணிவு படத்தில் நடனமாடியுள்ளார்.

டிக்டாக் ரமேஷூக்கு 2 மனைவிகள் உள்ளனர். 2 மனைவிகளுடன் மாறி, மாறி ரமேஷ் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், நேற்று டான்ஸர் ரமேஷ், அடுக்கு மாடி குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

tiktok-dancer-ramesh-suicided

குடும்பத்தினர் கூறிய திடுக்கிடும் தகவல்

டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவருடைய இரண்டாவது மனைவிதான் அவரை தள்ளி கொன்றுவிட்டார் என குடும்பத்தினர் கதறியுள்ளனர்.

இந்நிலையில், டான்சர் ரமேஷ் தற்கொலை செய்து கொள்ளவில்லை அவருடைய 2வது மனைவிதான் அவரை தள்ளி கொலை செய்துவிட்டார் என குடும்பத்தினர் கதறியுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து போலீசார் 2வது மனைவியிடம் விசாரணை நடத்தினர்.

போலீசார் விசாரணையில், குடிக்க பணம் தர மறுத்ததால் டான்ஸர் ரமேஷ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். இதை ரமேஷின் குடும்பத்தினர் முற்றிலும் மறுத்துள்ளனர்.

இது குறித்து ரமேஷின் குடும்பத்தினர் பேசுகையில், ரமேஷின் 2-வது மனைவி இன்பவள்ளியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

அப்போது, ​இன்பவள்ளி பல முறை ரமேஷை அடித்து துன்புறுத்தி இருக்கிறார். அவரை ரொம்பவே கொடுமைப் படுத்தி இருக்கிறார். நாங்கள் பல முறை அவரை மீட்டு கொண்டு வந்து அவருடைய மனைவி சித்ராவிடம் ஒப்படைத்துள்ளோம்.

ஆனால், அவர் திரும்பவும் அந்த இன்பவள்ளியிடமே போனார். இன்பவள்ளிதான் ரமேஷை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். ரமேஷ் தற்கொலை செய்து கொள்ளும் ஆள் இல்லை என்று குடும்பத்தினர் கதறியுள்ளனர்.