சுதந்திர இந்தியாவில் முதல்முறை - கைது செய்யப்பட்ட காந்தியின் கொள்ளு பேரன்
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
துஷார் காந்தி கைது
சுதந்திர இந்தியாவின் தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி, இன்று கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் நினைவு நாளை முன்னிட்டு, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையிலுள்ள ஆகஸ்ட் புரட்சி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது, துஷார் காந்தியை தடுப்பு காவலில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பெருமைப்படுகிறேன்
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள துஷார் காந்தி, சுதந்திர இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஆகஸ்ட் 9, ‘வெள்ளையனே வெளியேறு இயக்கம்’ நினைவு தினத்தை முன்னிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நான் சாண்டா குரூஸ் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டேன். எனது கொள்ளு தாத்தாவும், அப்பாவும் கூட பிரிட்டிஷ் காவல்துறையினரால் வரலாற்று சிறப்பு மிக்க இதே நாளில் கைது செய்யப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட பிறகு அவர், இரண்டு மணி நேரம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளார். மஹாராஷ்ட்டிர மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவும் அதே மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், பாதுகாப்பு கருதி துஷார் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
आज ९ अगस्तको जब मैं अगस्त क्रांती दिवस पर अगस्त क्रांति मैदान जाने नीकला तो पोल्स मुझे पकड़ कर साँताकृझ पोल्स स्टेशन ले आई डीटेन कर लीया। #मोदी_है_तो_मुमकीन_है।
— Tushar GANDHI (@TusharG) August 9, 2023