இந்த 3 பேருக்கு மட்டும் பாஸ்போர்ட்டே வேண்டாம்; எங்கவேனா பயணிக்கலாம் - யாரெல்லாம் தெரியுமா?
உலகில் 3 பேருக்கு மட்டும் பாஸ்போர்ட் இல்லாமல் பயணிக்கும் சலுகை உள்ளது.
பாஸ்போர்ட்
உலகின் அனைத்து நாட்டு பிரதமர்கள் மற்றும் ஜனாதிபதிகள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் செல்லும்போது அவர்கள் பாஸ்போர்ட்களை வைத்திருக்க வேண்டும். அவர்களின் பாஸ்போர்ட்கள் தூதரக பாஸ்போர்ட்களாக இருக்கும்.
இந்த தலைவர்களுக்கு பயணம் செல்லும் நாடு முழு சலுகைகளையும் வழங்குகிறது. இந்த தலைவர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பிற நடைமுறைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
சலுகை
இந்தியாவில் இந்த அந்தஸ்து பிரதமர், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு உண்டு. மேலும், பிரிட்டன் மன்னர், ஜப்பான் ராஜா மற்றும் ராணி ஆகிய மூவருக்கும் இந்த சலுகை உள்ளது.
பிரிட்டன் மன்னராக சார்லஸ் ஆவதற்கு முன்பு மறைந்த ராணி எலிசபெத்திடம் இந்த சலுகை இருந்தது. ஜப்பானின் பேரரசராக இருப்பவர் நருஹிட்டோ. அவரது மனைவி மசாகோ ஓவாடா ஜப்பானின் பேரரசி. தந்தை அகிஹிட்டோ பேரரசராக பதவி துறந்த பிறகு அவர் இந்த பதவியை ஏற்றுக்கொண்டார்.
விருந்தோம்பல்
அவரது தந்தை ஜப்பான் பேரரசராக இருக்கும் வரை, அவரும் அவரது மனைவியும் பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் தூதரக பாஸ்போர்ட்டை வைத்திருக்க வேண்டும்.
இவர்கள் வெளிநாடு பயணம் செய்தால் பாஸ்போர்ட் பற்றி யாரும் அவர்களிடம் கேட்பதில்லை. மாறாக, அவர்களுக்கு கூடுதல் விருந்தோம்பல் மற்றும் முழு மரியாதையும் வழங்கப்படுகிறது.