மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அலுவலகத்திற்கு மிரட்டல் - பாதுகாப்பை பலப்படுத்திய போலீசார்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அலுவலகத்திற்கு தொலைபேசியில் மிரட்டல் வந்ததை அடுத்து அவரது வீடு மற்றும் கட்சி அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அலுவலகத்திற்கு மிரட்டல்
பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர் நிதின் கட்கரி ,மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது மக்கள் தொடர்பு அலுவலகம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ளது.
இந்நிலையில் , நிதின் கட்கரி அலுவலகத்திற்கு நேற்று காலை ஜெயேஷ் என்பவர் போன் செய்து ரூ .10 கோடி தரவேண்டும் என கேட்டு உள்ளார்.
மேலும் பணம் கொடுக்காவிட்டால் நிதின் கட்கரியை தாக்குவேன் என மிரட்டல் விடுத்துள்ளார் , அந்த நபர் காலை 2 முறையும் ,மதியம் 12 மணியளவில் ஒரு முறையும் போன் செய்து மிரட்டல் விடுத்துள்ளார்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இது குறித்து அலுவலக ஊழியர்கள் போலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்து , நாக்பூரில் உள்ள நிதின் கட்கரியின் வீடு ,அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது .
இதே போல் கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி புஜாரி என்ற நபர் தான் தாவூத் இப்ராகிம் கூட்டாளி என்றும் தனக்கு ரூ .100 கோடி பணம் வேண்டும் என அலுவலகத்திற்கு போன் மூலம் மிரட்டல் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.நிதின் கட்கரி அலுவலகத்திற்கு நேற்று வந்த மிரட்டல் அழைப்பு இரண்டாவது முறையாகும் .