மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம்.. தூத்துக்குடியில் வேண்டாம்: தமிழக அரசு!
ஸ்டெர்லைட் ஆலையினை ஆக்சிஜன் உற்பத்திக்காக மீண்டும் திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து கேள்விஎழுப்பிய நீதிபதி ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாமே?, என்றும் தற்ப்போது ஆக்சிஜன் இன்றி மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர்.
ஆகவே ஆலையை திறக்கக்கூடாது என தமிழகம் கூறுவது சரியா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினர்.
இதற்கு, பதில் கூறிய தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை நாங்கள் ஏற்று நடத்தினாலும் தூத்துக்குடி பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளது.
தூத்துக்குடியில் மீண்டும் ஒரு மீண்டும் ஒரு துப்பாக்கி சூட்டினை தமிழக அரசு விரும்பவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.