உச்சநீதிமன்ற தீர்ப்பு... - ஈபிஎஸ்க்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்...!

Thol. Thirumavalavan Tamil nadu Edappadi K. Palaniswami
By Nandhini Feb 23, 2023 08:23 AM GMT
Report

உச்சநீதிமன்ற வழக்கு சாதகமாக வந்ததையடுத்து ஈபிஎஸ்க்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

அ.தி.மு.க. பொதுக் குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்து எடுத்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் இரு நீதிபதிகள் வழங்கிய உத்தரவையும் உறுதி செய்வதாக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினர். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வசமாகியுள்ளது.

thol-thirumavalavan-k--palaniswami

திருமாவளவன் வாழ்த்து

இந்நிலையில், உச்சநீதிமன்ற வழக்கு சாதகமாக வந்ததையடுத்து ஈபிஎஸ்க்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன், அடிப்படை தொண்டனாக அரசியல் வாழ்வைத் தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி, இன்று அதிமுகவின் பொதுச்செயலாளராக உறுதிப்பட்டிருப்பது அவரது வலுவான ஆளுமைக்குச் சான்றாக உள்ளது. இவ்வாய்ப்பு மீண்டும் பாஜகவைச் சுமப்பதற்குப் பயன்படுமேயானால் இங்கு யாவும் பாழே என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.