இந்தியாவில் 'டீ' குடிப்பவர்கள் அதிகம் உள்ள மாநிலம் எது தெரியுமா? இதுதான் காரணம்!
இந்தியாவில் அதிகம் 'டீ' குடிப்பவர்கள் உள்ள மாநிலம் குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
டீ
ஒரு கப் டீ என்பது சோம்பலை முறித்து மனிதனைச் சுறுசுறுப்பாக்கும் என காலகாலமாக நம்பப்படுகிறது.பலரும் தினசரி தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகம் டீயை தான் விரும்பி குடிக்கின்றனர்.அந்த அளவிற்கு இது முக்கியத்துவம் வாய்ந்துள்ளது.
இப்படி அதிக அளவில் டீ குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்ற விவாதம் எப்போதும் நடைபெறுவது உண்டு.இந்த நிலையில் இந்தியாவில் அதிகம் 'டீ' குடிப்பவர்கள் உள்ள மாநிலம் எது என்பது குறித்து இந்தியத் தேயிலை வாரியத்தால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காரணம்
அதில், குஜராத் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இதையடுத்து பட்டியலில் 2வது இடத்தில் ஹரியானா மாநிலம் உள்ளது.3வது இடத்தில் கோவா ஆகியவை உள்ளன.இதனை தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் இந்த பட்டியலில் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் மாநிலத்தில் பால் எளிதில் கிடைப்பதுதான் என்று கூறப்படுகிறது.அதேவேளையில் அதிகப்படியாக டீ குடிக்கும் பழக்கம் உடலுக்கு கேடானது. இதனைத் தவிர்க்க வேண்டும்.