'' திருவள்ளுவரின் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை” – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

modi primeministermodi tweeted thiruvalluvarprinciple
By Irumporai Jan 15, 2022 04:01 AM GMT
Report

திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும்,அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாழ்வியலுக்கு தேவையான வழிகளை ஒன்றரை அடிகளில் திருக்குறள் மூலம் போதித்த திருவள்ளுவரை போற்றும் வகையில் தை மாதம் 2 ஆம் நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில்,தை மாதம் 2 ஆம் நாள் ஜனவரி 15 ஆம் தேதியான இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது.இந்நிலையில்,திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதாகவும்,அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் தமிழில் கூறியதாவது: “திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை.

பன்முகத்தன்மை & அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை & விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.