ஊரடங்கில் இருந்து விலக்களிக்க வேண்டும் - திருப்பூர் எம்.பி சுப்பராயன் கடிதம்

people letter thirupur textile
By Praveen Apr 20, 2021 06:15 PM GMT
Report

திருப்பூர் பின்னலாடை துறைக்கு ஊரடங்கில் இருந்து விலக்களிக்க வேண்டும் என எம்.பி சுப்பராயன் தமிழக தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் இன்று இரவு முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த அறிவிப்பால் பலரும் சற்று மாற்றத்தை கண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் பனியன், ஆயத்த ஆடை, பின்னலாடை நிறுவனங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருவதாகவும் இங்கு தயாராகும் ஆடைகளை ஏற்றுமதி செய்வதை குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதால் இரவு நேர பணி அவசியமாகிறது எனவும், பின்னலாடை துறை நலிவடைவதை தடுக்கும் பொருட்டு பின்னலாடை துறைக்கு ஊரடங்கில் இருந்து விலக்களிக்க வேண்டும் என திருப்பூர் எம்.பி சுப்பராயன் தமிழக தலைமை செயலாளருக்கு கோரிக்கை மனுவை கடிதம் மூலம் அனுப்பி உள்ளார்.

ஊரடங்கில் இருந்து விலக்களிக்க வேண்டும் - திருப்பூர் எம்.பி சுப்பராயன் கடிதம் | Thirupoor Textile People Letter