பொய் சொன்னது திமுகவா? அதிமுகவா? ஜெயலலிதா சேலை இழுக்கப்பட்ட விவகாரம்..திருநாவுக்கரசு பரபரப்பு பேட்டி
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் நாடாளுமன்ற உரையை தொடர்ந்து தற்போது சட்டசபையில் ஜெயலலிதாவின் சேலை இழுக்கப்பட்டதா என்ற விவாதம் பெரிதாக எழுந்துள்ளது.
நிர்மலா சீதாராமன் பேச்சு
எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த 1989-ஆம் ஆண்டு தமிழக சட்டசபையில் அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவின் சேலையை இழுத்த கட்சி திமுக என ஆவேசமாக பேசினார்.
அவரின் இந்த கருத்து தற்போது தமிழகத்தை தாண்டி, தேசிய அளவில் பெரும் விவாதங்கள் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தலைவர்களும் இந்த விவகாரத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முக ஸ்டாலின் விளக்கம்
இந்நிலையில் தான், நேற்று இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். அவர் கூறும் போது, அது போன்று ஒரு விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் நடைபெறவில்லை என்றும் சில வாட்ஸ்ஆப் கருத்துக்களை நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
திருநாவுக்கரசு பேட்டி
இதில் தற்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசு பதிலளித்துள்ளார். அப்போது அவர் அதிமுகவில் ஜெயலலிதா ஆதரவாக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், தான் பிரதான எதிர்கட்சியின் துணை தலைவர். சட்டமன்றத்தில் தற்போது இருப்பது போல் ஆளும்கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் இடையே இடைவெளி இருக்காது என்றும் கலைஞர், அன்பழகன் இருக்கைக்கு எதிர் வரிசையில் ஜெயலலிதா அருகில் தான், மூப்பனார், ஆகியோர் அமர்ந்திருந்தனர் என தெரிவித்தார்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தலைமையில் நடந்த 26 MLA'க்கள் கூட்டத்தில் பட்ஜெட் வாசிக்க விடாமல் தடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா ராஜினாமா கடிதம் தொடர்பாக பிரச்சனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.சட்டமன்றத்தில் கலைஞர் பட்ஜெட் வாசிக்கும் போது பின்னால் இருந்த ஒரு MLA பட்ஜெட் புத்தகத்தை இழுத்தார். உடனே கலைஞர் சத்தம் போட்டு திரும்பும் போது கலைஞரின் கண்ணாடி கழன்று கீழே விழுந்தது. அப்போது அவர் தடுமாறினார் என்றும் உடனே மூத்த அமைச்சர்கள் கலைஞரை அழைத்து சென்று விட்டனர் என குறிப்பிட்டார்.
ஆனால், பின்னால் இருந்த திமுக MLA'க்கள் கலைஞர் முகத்தில் குத்தி தாக்கி விட்டதாக நினைத்துவிட்ட காரணத்தால், பட்ஜெட் புத்தகங்களை வீசினார். அதனால், எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதாவிற்கு பாதுகாப்பாக தானும் அப்போது அதிமுகவின் கொறடாவாக இருந்த KKSSR ஆகியோர் நின்றோம் என தெரிவித்தார்.
அதனை தாண்டியும் சில புத்தகங்கள் ஜெயலலிதா மீது, தன் மீதும் விழுந்தது என குறிப்பிட்டு. புத்தகம் விழுந்ததால் ஜெயலலிதாவின் தலை களைந்தது. பிரச்சனை காரணமாக, உடனே ஜெயலலிதாவை வெளியில் பாதுகாப்பாக அழைத்து வந்து காரில் ஏற்றி வீட்டிற்கு அழைத்து வந்தோம். சண்டை, அசம்பாவிதம் நடந்தது எல்லாம் உண்மை தான்.
ஆனால் அடி தடியோ ரத்த காயங்களோ கிடையாது. கலைஞர் முகத்தில் குத்திவிட்டதாக திமுகவும் ஜெயலலிதா சேலை பிடித்து இழத்தாக அதிமுகவும் பிரச்சாரம் செய்தனர்.
ஆனால் இந்த 2 சம்பவமும் உண்மை கிடையாது. கலைஞர் முகத்தில் குத்தவும் இல்லை. ஜெயலலிதா சேலையை பிடித்து இழக்கவும் இல்லை. கூச்சல், குழப்பம், புத்தகங்கள் வீச்சு நடந்தது உண்மை என திருநாவுக்கரசு பரபரப்பாக தெரிவித்துள்ளார்.