ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த வழக்கு: வழக்கை விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தடை கோரி வி.சி.க தலைவர் திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
தமிழகம் முழுவதும் 50 க்கும் அதிகமான இடங்களில் அக்டோபர் 2 ம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆர் எஸ் எஸ் ஊர்வல அனுமதி
இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி இளந்திரையன் அணிவகுப்பு ஊர்வலதிற்கு அனுமதி வழங்கினார். இந்த உத்தரவை எதிர்த்து விசிக கட்சி தலைவர் திருமாவளவன் சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று மனுதாக்கல் செய்தார்.
அதோடு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கதொல் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், மத நல்லிணக்கத்தை குலைத்து பிரித்தாளும் கொள்கையை பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி அன்று அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது. விஜய தசமி மீது நம்பிக்கை இல்லாத அம்பேத்கரின் கொள்கைக்கு முரணாக இந்த அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
திருமா எதிர்ப்பு
அம்பேத்கரை இந்துத்துவா ஆதரவளராக சித்தரிக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது. எனவே, அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்க கூடாது" என்று மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக இன்று அல்லது நாளை விசாரிக்க வேண்டும் என திருமாவளவன் தரப்பில் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று முறையீடு செய்யப்பட்டது.
தடை வழங்க மறுப்பு
ஆனால் நீதிபதி, ஏற்கெனவே உத்தரவிட்ட வழக்கில் மனுதாரராகவோ அல்லது எதிர் மனுதாரராகவோ இல்லாதபோது இந்த மனுவை எப்படி விசாரிக்க முடியும்? என கேள்வி எழுப்பி, அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டார்.