தமிழகத்தில் அவர்களின் வால் ஒட்ட நறுக்கப்படும் - திருமாவளவன் கடும் விமர்சனம்
பிற மாநிலங்களை போன்று தமிழகத்தில் சேட்டை செய்தால் அவர்களின் வால் ஒட்ட நறுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் கடும் விமர்சனம்
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் இந்து அமைப்பினர், அக்டோபர் 2ஆம் தேதி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பேரணி செல்ல இருந்தனர்.
இந்த பேரணிக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுக்கவே நீதிமன்றத்தில் முறையிட்டு நவம்பர் 6ஆம் தேதி பேரணி செல்ல அனுமதி பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு ஆரம்பம் முதலே மறுப்பு தெரிவித்து வந்தவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்.
இவை அண்மையில் பேசுகையில், ‘ தமிழகத்தில் பாஜகவுக்கு பணியும் அரசு இல்லை. அவர்களுக்கு கூடை கும்பிடு போடும் அரசு இங்கு இல்லை. பிற மாநிலங்களை போல தமிழகத்தையும் பார்க்கிறார்கள்.
இங்கு நடப்பது, பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி, கலைஞர் ஆட்சி. பிற மாநிலங்களில் செய்த சேட்டைகளை இங்கே செய்ய முடியாது. அப்ப்டி செய்தால், அவர்களின் வால் ஓட்ட நறுக்கப்படும்.’ என காரசாரமாக விமர்சித்தார்.