திடீரென ஏற்பட்ட உடல்நல கோளாறு...மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் காய்ச்சல் காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர், சென்னை- நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலுக்கான துவக்க நிகழ்ச்சி, காங்கிரஸ் ஒபிசி பிரிவு சார்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் திருமாவளவன் கடந்த சில நாட்களாக பங்கேற்று இருந்தார்.
தொடர்ந்து கட்சியின் சார்பில் நடத்தப்பட்டு வரும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வரும் திருமாவளவன், உடல் சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக அவருக்கு காய்ச்சல் ஏற்பட சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, கட்சியின் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் யாரும் வரும் 30 ஆம் தேதி வரை அவரை சந்திக்க வர வேண்டாம் என்று கட்சியின் சார்பில் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.