பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? கொந்தளித்த திருமா..!!

Thol. Thirumavalavan Tamil nadu R. N. Ravi Governor of Tamil Nadu
By Karthick Oct 04, 2023 11:51 AM GMT
Report

பறையர்களுக்கு பூணூல் அணிவிக்கும் ஆளுநர் ஆதி திராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா? என தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமா அறிக்கை

சிதம்பரம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள நந்தனார் பிறந்த ஆதனூர் கிராமத்தில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்று கொண்டார். அந்நிகழ்ச்சியில், 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

thiruma-slams-rn-ravi-in-punal-issue

இந்த தொடர்பான செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நந்தனார் பிறந்த ஊர் ஆதனூரில் 100 பறையர்களுக்கு பூணூல் அணிவிக்காறாராம் ஆளுநர் சனாதனி ஆர்.என்.ரவி அவர்கள். இது மேன்மைப் படுத்துகிறோம் என்னும் பெயரில் உழைக்கும் மக்களை இழிவுப் படுத்துவதாகும். இதுதான் சனாதனம் ஆகும்.

ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா?

இதன்மூலம் பூணூல் அணியாத மற்றவர்கள் இழிவானவர்கள் என்கிறாரா ஆளுநர்? பூணூல் அணிவிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களை கோவில் பூசாரிகளாக்குவாரா ஆளுநர்? அத்துடன், ஆளுநர் அவர்கள் நந்தன் வழிபட்டதால் நடராசர் கோவிலில் அடைக்கப்பட்டுள்ள சுவரைத் தகர்த்து வாசலைத் திறந்து விட வேண்டுகிறோம்.


நாடாண்ட மன்னன் நந்தனை மாடுதின்னும் புலையன் என இழிவுப்படுத்தும் பெரிய புராணக் கட்டுக்கதைகளைப் புறந்தள்ளுவோம். என திருமாவளவன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக சிதம்பரம் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காட்டுமன்னார்கோவில் அருகே போராட்டம் செய்தனர்.