புலி இல்ல...பூனை வெளியே வந்துவிட்டது... ரஜினி குறித்து திருமா கடும் விமர்சனம்
யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினி விழுந்த நிலையில், அதனை கடுமையாக விமர்சித்துள்ளார் விசிக தலைவர் திருமாவளவன்.
ரஜினி - யோகி ஆதித்யநாத் சந்திப்பு
கடந்த 9-ஆம் தேதி இமயமலை சென்ற நிலையில், அந்த பயணத்தை முடித்து கொண்ட ரஜினிகாந்த் தொடர்ந்து பாஜக தலைவர்களை சந்தித்து வருகின்றார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் என பலரையும் சந்தித்து வருகிறார்.
இதில் ரஜினி யோகி ஆதித்யநாத்தை சந்தித்த போது, அவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். அந்த புகைப்படங்கள் பெரும் வைரலான நிலையில், பலரும் இதற்கு பெரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
திருமாவளவன் கருத்து
இந்நிலையில், இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழநாட்டு மக்கள் ரஜினியை எவ்வளவு உயர்வாக நினைத்து கொண்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டி, ஆனால் நீங்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரே நிகழ்வில் காண்பித்து விட்டீர்கள் என விமர்சித்தார்.
பூனை குட்டி வெளியே வந்துவிட்டது என கடுமையாக சாடிய திருமாவளவன், இப்படிப்பட்டவர்களிடம் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.