பாஜகவுடன் கூட்டணி வைப்பதற்கு முன் யோசிக்க வேண்டும் - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

Vijayakanth Tamil nadu BJP DMDK
By Karthick Oct 04, 2023 04:31 AM GMT
Report

மத்திய அரசுடன் கூட்டணி வைப்பதற்கு முன்னர் அனைத்து கட்சிகளும் யோசித்து முடிவெடுக்கவேண்டும் என தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சி

சென்னை கிண்டியிலுள்ள ராஜபவனில் ஆளுநர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி சார்பாக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பங்கெடுத்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என கேள்வி எழுப்பப்பட்டது.

think-before-alliancing-with-bjp-premalath

இதற்கு பதிலளித்த பிரேமலதா, நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு மாத காலம் இருப்பதால் எந்த கட்சியும் தங்களது நிலைப்பாட்டை உறுதியாக சொல்லவில்லை என்று கூறி, தேர்தல் வரும் பொழுது தங்களுடைய கூட்டணி அறிவிக்கிறோம் என்று தான் சொல்கிறார்கள் என்பதை குறிப்பிட்டு, நிச்சயம் நேரம் வரும்போது யாருடன் கூட்டணி என்பதை தெரிவிக்கிறோம் என்றார்.

யோசிக்க வேண்டும்

பாஜக - அதிமுக விவகாரம் குறித்தும் பதிலளித்த பிரேமலதா, இதில் தேமுதிகவின் பங்கு எதுவும் இல்லை இந்த கேள்விகளை பாஜகவையும் அதிமுகவையும் தான் கேட்க வேண்டும் என்றார். ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோரை நேரில் சந்தித்தாக குறிப்பிட்ட அவர், ஆனால் கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை என்றார். பாஜககூட்டணியில் தேமுதிக இடம் பெறுமா என்ற கேள்விக்கு, நேரம் வரும் பொழுது கூட்டணி தொடர்பாக தெரிவிப்போம்.

think-before-alliancing-with-bjp-premalath

தேர்தலுக்கு என்று கூறி, மூன்று மாத காலத்திற்குள் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றார். தேமுதிகவின் நிலைப்பாடு தொடர்பாக டிசம்பர் அல்லது ஜனவரி'க்குள் அறிவிக்கப்படும் என்று தகவல் அளித்து, தமிழகத்தில் நிரந்தரமாக உள்ள பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் உள்ளது என்று குறிப்பிட்டு, மத்திய அரசுடன் கூட்டணி வைக்கும் பொழுது அனைத்து கட்சிகளும் யோசிக்க வேண்டும் என்று கூறினார்.