திருடச் சென்ற வீட்டில் ஏசி போட்டு நூடுல்ஸ் சாப்பிட்ட திருடர்கள் - அப்புறம் என்ன..?
திருடர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்து, நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருடர்களின் செயல்
உத்தரப்பிரதேசம், லக்னோவில் வசிக்கும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி பாபுல் சிங். இவர் தனது சிகிச்சைக்காக குடும்பத்தோடு டெல்லிக்கு சென்று இருந்தார்.
இதனை அறிந்த திருட்டுக்கும்பல் ஒன்று அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். தொடர்ந்து கையில் கிடைத்ததை மூட்டை கட்டியுள்ளனர். பின், அங்கிருந்த நூடுல்ஸ் பாக்கெட்டை எடுத்து சமைத்து சாப்பிட்டுவிட்டு நன்றாக தூங்கியுள்ளனர்.
அதிர்ந்த போலீஸ்
காலை எழுந்ததும் குளித்து முடித்து விட்டு கட்டிய மூட்டைகளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளனர். மறுநாள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பது குறித்து பக்கத்து வீட்டுக்காரர் வங்கி அதிகாரி பாபுல் சிங்கிற்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அளித்த புகாரின்படி, விரைந்த போலீஸார் வீடு முழுக்க சிதறிக் கிடந்த உடைகளையும், காலி நூல்ஸ் பாக்கெட்டுகளையும் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்த விசாரணையில் தங்க ஆபரங்ணகள் எல்லாம் தன்னிடம் பத்திரமாக இருப்பதாக பாபுல் தெரிவித்துள்ளார். தற்போது வழக்கு பதிந்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.