கடவுளை பயபக்தியோடு வணங்கிவிட்டு, உண்டியலை உடைத்து திருடிய திருடன் - வைரலாகும் வீடியோ

Viral Video
By Nandhini Aug 10, 2022 11:33 AM GMT
Report

கடவுளை பயபக்தியோடு வணங்கிவிட்டு, உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற திருடனின் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடவுளை வணங்கிவிட்டு கொள்ளையடித்த திருடன்

அந்த வீடியோவில், மத்தியப்பிரதேசம், ஜபல்பூர் கிராமத்தில் லக்ஷ்மி கோவில் ஒன்று உள்ளது.

இக்கோவிலில் நுழைந்த திருடன் ஒருவன் உண்டியலில் உள்ள பணத்தை திருடுவதற்கு முன்பு, ரொம்ப பய பக்தியோடு தெய்வத்தை வணங்கி விட்டு, உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

Thief - viral video

உண்டியலில் பணம் கொள்ளைபோன தகவல் போலீசாருக்கு செல்ல, கோவிலில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, திருடன் சாமியை வணங்கிவிட்டு கொள்ளையடித்தது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.