என்னை சுட்டு கொன்றுவிடுவார்கள் : திருமாவளவன் பேச்சால் பரபரப்பு
2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒரே இரவில் செல்லாது என்று அறிவித்து விடுவார்கள். நான் சுட்டுக் கொல்லப்படலாம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் .
திருமாவளவன்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எம்பியுமான திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, இன்று நமக்கு தலை நிமிர்வையும் தன்மானத்தையும் பெற்று தந்தது எது என்றால் சமூகநீதி என்கிற கோட்பாடு தான். ஜனநாயகம் என்கிற கோட்பாடு தான். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரே கோட்பாடாக தந்திருப்பது நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் என்றார்.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் வழக்கின் தீர்ப்பு தொடர்பாக சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற எம்பியுமான திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, இன்று நமக்கு தலை நிமிர்வையும் தன்மானத்தையும் பெற்று தந்தது எது என்றால் சமூகநீதி என்கிற கோட்பாடு தான். ஜனநாயகம் என்கிற கோட்பாடு தான். ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரே கோட்பாடாக தந்திருப்பது நமது இந்திய அரசியலமைப்பு சட்டம் என்றார்.
ஆர். எஸ். எஸ் இயக்கத்தை நோக்கியே இடதுசாரிகளும் , ஜனநாயகவாதிகளும் அரசியல் சட்டத்தை மீறுகிறார்களா என கேள்வி எழுப்புகின்றனர். அதனால்தான் கௌரி லங்கேஷை வீடு தேடி போய் படுகொலை செய்தார்கள்.
மனுஸ்மிருதிதான் நாட்டின் சட்டம்
அவர் எந்த கட்சியும் கிடையாது . அதேபோன்று பேராசிரியர் கல்புர்கியை வீடு போய் வீடு தேடி போய்க் கொன்றார்கள். தபேல்கரையும் இப்படித்தான் கொன்றார்கள். இவர்கள் என்ன அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களா? என்று கேட்டு ஆவேசமானார்.
சுட்டு கொலை செய்யப்படலாம்
மேலும் பேசிய திருமாவளவன், வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை ஒரே இரவில் செல்லாது என்று அறிவித்து விடுவார்கள். மனுஸ்மிருதிதான் நாட்டின் சட்டம் என்று சொல்லிவிடுவார்கள்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் யார் யார் எந்தெந்த சிறைகளில் இருப்பார்கள் என்று தெரியாது. ஒரு வேளே நான் சுட்டு கொலை செய்யப்படலாம். என்னை சுட்டு கொன்றுவிடுவார்கள் என்று பேசினார்.