பாஜகவின் உள்நோக்கம்...அதனாலே கைது...செந்தில் பாலாஜி தரப்பு வாதம்

V. Senthil Balaji Tamil nadu DMK BJP Enforcement Directorate
By Karthick Sep 15, 2023 09:23 AM GMT
Report

சட்டவிரோத பணபரிவர்தனையில் கைதாகி இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் வழக்கில் செப்.20-இல் தீர்ப்பளிக்கப்டும் என நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி - ED

2015-ஆம் ஆண்டு சட்டவிரோத பணபரிவர்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதாகி தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், அவர் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

there-is-bjp-hand-in-my-arrest-says-senthil-balaji

இதில், இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு வரும் செப்.20-இல் வழங்கப்படும் என சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.

உள்நோக்கத்துடன் கைது

இதில், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டள்ளது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜி தரப்பில், சட்டவிரோதமான பணப்பரிவர்த்தனை நடத்தற்கான எந்தவித ஆதாரமோ சாட்சிகளோ இல்லை என வாதிடப்பட்டது.

there-is-bjp-hand-in-my-arrest-says-senthil-balaji

மேலும், பாஜகவின் அழுத்தம் காரணமாகவே உள்நோக்கத்துடன் கைது நடவடிக்கை ,மேற்கொள்ளப்பட்டது என தெரிவித்து விரைவில் ஜாமீன் மனுவில் தீர்ப்பளிக்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுக்கள் மாநில அரசின் மத்திய அரசு குற்றப்பிரிவில் இருந்து பெறப்பட்டவை என செந்தில் பாலாஜியின் தரப்பு வாதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.