ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டும் தான் - அமெரிக்காவில் தொடரும் தட்டுப்பாடு..!
அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒரு குடும்பத்திற்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசு தடை
கடந்த ஜுலை மாதம் 20 ஆம் தேதி முதல் பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது.
அரிசி தேவைக்காக இந்தியாவை மட்டும் நம்பி இருக்கும் பல உலக நாடுகள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
அமெரிக்காவில் கடும் தட்டுப்பாடு
இதனால் அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் பகுதிகளில் அரிசி வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
மேலும் சூப்பர் மார்க்கெட்டில் ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு மூட்டை அரிசி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்கு அரிசி விலை உயர்ந்து வருகிறது. முன்பு 22 டாலராக இருந்த அரிசிப் பையின் விலை தற்போது 47 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
உலகளாவிய அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40 சதவீதம் பங்கு வகித்து வருகிறது. இந்தியாவிலிருந்து 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் அரிசி ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்துள்ளதால் சர்வதேச அளவில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அமெரிக்காவில் உள்ள ரேசன் கடைகளில் அரிசி வாங்க வெளிநாட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Rice bag NRIs standing in line to collect rice in the US,just like how they stand in front of a ration shop.pic.twitter.com/L0YqEwqrsa
— Брат (@B5001001101) July 25, 2023