நட்பு முறிந்தது..வைரமுத்துவை விட திறமையான நிறைய பேர் இருக்காங்க - இயக்குநர் மணிரத்னம்

Tamil Cinema Ponniyin Selvan: I Vairamuthu Mani Ratnam
By Thahir Sep 20, 2022 11:09 AM GMT
Report

கவிஞர் வைரமுத்துவை விட தமிழ் சினிமாவில் திறமையான புதிய பாடலாசிரியர்கள் நிறைய பேர் வருகிறார்கள். திரைத்துறையில் 30 வருட நண்பர்களாக இருந்து வருபவர்கள் இயக்குநர் மணிரத்னம் மற்றும் கவிஞர் வைரமுத்து.

மணிரத்னம் பரபரப்பு பேச்சு 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இளங்கோ கிருஷ்ணன், வெண்பா, கபிலன், ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

1992 ஆம் ஆண்டு வெளியான ரோஜா படத்தின் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து பாடல்கள் எழுதியிருந்தார்.

முதல் முறையாக இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வைரமுத்து பாடல் எழுதவில்லை.

இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

நட்பு முறிந்தது..வைரமுத்துவை விட திறமையான நிறைய பேர் இருக்காங்க - இயக்குநர் மணிரத்னம் | There Are Many More Talented Than Vairamuthu

அப்போது செய்தியாளர்கள் ஏன் வைரமுத்துவை பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து மணிரத்னம், தமிழ் மொழி பன்னெடுங்காலமாக உள்ளது.

தமிழ் சினிமாவில் நிறைய இயக்குநர்கள் இருக்கிறார்கள், திறமையான புதுமுக இயக்குநர்கள் தமிழ் சினிமாவிற்கு வருகிறார்கள்.

நட்பு முறிந்தது..வைரமுத்துவை விட திறமையான நிறைய பேர் இருக்காங்க - இயக்குநர் மணிரத்னம் | There Are Many More Talented Than Vairamuthu

அதைப் போல தமிழ் மொழியில் நிறை வளம் இருக்கிறது. நான் வைரமுத்து சாருடன் நிறைய படங்களில் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். அவருடைய நிறைய கவிதைகளை நானும் ரகுமான சாரும் இணைந்து பாடலாக்கியுள்ளோம்.

அவர் ஒரு அற்புதமான கவிஞர். ஆனால் அவரை விட புதிய திறமையான பாடலாசிரியர்கள் நிறைய பேர் வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.