நயன்தாரா அபார்ட்மெண்ட்டில் கொள்ளை...2 கோடி மதிப்பு பொருட்களை சுருட்டிய கார் டிரைவர்!

Nayanthara Tamil nadu Chennai
By Karthick Jul 01, 2024 03:19 AM GMT
Report

நடிகை நயன்தாரா வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

கொள்ளை

சென்னை எம்.ஆர்.சி நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பங்குச்சந்தை வர்த்தகர் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். தனது லாக்கரின் சாவியை தேடிய போது அந்த சாவி தொலைந்து போயுள்ளது.

theft in actress nayanthara apartment in chennai

அந்த லாக்கரில் தங்கம், வெள்ளி, பணம் போன்றவை உள்ளன. அதே நேரத்தில் அவரிடம் 10 வருடங்களாக பணியாற்றி வந்த சரவணன் என்பவர் திடீரென வேலையை விட்டு விலகியுள்ளார்.

படத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நயன்தாரா - பகீர் கிளப்பிய பிரபலம்!!

படத்திற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நயன்தாரா - பகீர் கிளப்பிய பிரபலம்!!

https://www.youtube.com/watch?v=0FbieUSOOCE

சந்தேகம் ஏற்பட்டவர், லாக்கரை உடைத்து பார்த்த போது, அதிலிருந்து 250 பவுன் தங்கம், 10 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் 25 லட்சம் மதிப்புள்ள ரொக்க பணம் ஆகியவை கொள்ளை போயுள்ளதை போயுள்ளதாக கூறப்படுகிறது

theft in actress nayanthara apartment in chennai

சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகாரளிக்க, கைரேகை நிபுணர்களை வைத்து நடத்த சோதனையில் டிரைவர் சரவணனை கைது செய்துள்ளனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தான் சென்னை மாநகராட்சி காவல் ஆணையர், பிரபல நடிகை நயன்தாரா ஆகியோர் வசித்து வருகிறார்கள்.