வீடு, வீடாக திருடிய நகைகளை பல பெண்களிடம் கொடுத்து உல்லாசம் அனுபவித்து வந்த 70 வயது முதியவர் - அதிர்ச்சி சம்பவம்

Arrest Theft அதிர்ச்சி சம்பவம் கைது 70-years-old-man 70 வயது முதியவர் Traumatic-event திருட்டு
By Nandhini Mar 07, 2022 06:30 AM GMT
Report

பெங்களூரு நிமான்ஸ் லே-அவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த பணம் திருடுப் போனது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர் சுத்தகுண்டேபாளையா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். திருடு நடந்த வீட்டின் முன்னால் பொருத்தப்பட்டிருந்த கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கேமராவில் ஒரு 70 வயது தக்க முதியவர் வீட்டிலிருந்து சென்றது பதிவாகியிருந்தது.

இதனையடுத்து, கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து சுத்தகுண்டே பாளையா போலீசார் அந்த முதியவரை கைது செய்தனர். அப்போது விசாரணையில் அவர் சிக்கமகளூருவை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. ரமேஷிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. ரமேசுக்கு ஏற்கனவே 2 முறை திருமணமானவர். இவருக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள்.

இவர், கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷ், 3-வதாக இளம்பெண் ஒருவரை திருமணம் செய்ய முயற்சி செய்தார். இதை அறிந்த 2 மனைவிகள், பிள்ளைகள் இவரை வீட்டிலிருந்து வெளியே அனுப்பிவிட்டனர்.

வீட்டிலிருந்து வெளியே ரமேஷ், தமிழ்நாட்டிற்கு வந்து தங்கினார். தமிழ்நாட்டில், பூட்டியிருந்த வீடுகளை நோட்டமிட்டு நகை, பணத்தை திருடி வந்துள்ளார்.

இந்த திருடிய நகை, பணத்தை பல பெண்களிடம் கொடுத்து அவர்களுடன் உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளார்.

இதுவரை திருட்டு வழக்கில் ரமேஷை 4 முறை தமிழக போலீசார் கைது செய்துள்ளனர். பிறகு, ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதனையடுத்து, பெங்களூருக்கு சென்று திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த ரமேஷ், வழக்கம் போல் திருடிய நகைகளை பல பெண்களிடம் கொடுத்து அவர்களிடம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

விசாரணையில், ரமேஷிடமிருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான 162 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 

வீடு, வீடாக திருடிய நகைகளை பல பெண்களிடம் கொடுத்து உல்லாசம் அனுபவித்து வந்த 70 வயது முதியவர் - அதிர்ச்சி சம்பவம் | Theft 70 Years Old Man Arrest Traumatic Event