கணவரான தேர்தல் அலுவலரை வாக்குச்சாவடிக்கு முதுகில் சுமந்து வந்த மனைவி..!
விபத்தின் காரணமாக நடக்க முடியாமல் போனதால் அவரது மனைவி தன் தோலில் துாக்கி வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்காக சத்ரா கல்லுாரி வாக்குச்சாவடிக்கு மனோஜ் குமார் என்பவர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த விபத்தில் காயமடைந்துள்ள மனோஜால் நடக்க முடியாமல் போனது.
இதனிடையே தேர்தல் அலுவலராக மனோஜ்குமார் நியமிக்கப்பட்டதால் அதை தவிர்க்கவும் மனோஜ் குமாருக்கு மனம் இடம் தரவில்லை.
நடக்க முடியால் எப்படி போவது என்று யோசித்த நிலையிர் அவரது மனைவி தன் கணவனை ஊக்கப்படுத்தி தன் முதுகில் சுமந்து கொண்டு வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.
இதை பார்த்த உயர் தேர்தல் அலுவலர்கள் அவரை வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.