இரட்டை குழந்தைக்கும் நயன்தாராவுக்கும் சம்மந்தம் இல்லை - வெளியான திடுக்கிடும் தகவல்
இரட்டை குழந்தைகளுக்கும் நயன்தாராவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
காதல் திருமணம்
கடந்த 2015ம் ஆண்டு ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாரா நடித்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார்.
இந்த படத்தின் படப்பிடிப்பில்தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த 7 வருடமாக காதலித்து வந்த இவர்கள், லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர்.
தம்பதிக்கு இரட்டை குழந்தை
திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் திடீரென கடந்த 9ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை, தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் டிவிட்டரில் தெரிவித்தார்.
இந்த தகவல் ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இது தொடர்பாக விசாரித்ததில், வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றிருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் நயன்தாரா விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றாரா என விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்திருந்தது.
பொதுவாக இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் பல்வேறு விதிமுறைகள் உள்ளது.
நயன்தாராவுக்கும் குழந்தைகளுக்கும் தொடர்பில்லை
மருத்துவர் ஒருவர் இதுகுறித்து அளித்துள்ள பதிவில், இந்தியாவில் பாரம்பரியமான வாடகைத்தாய் முறை இருந்தது.
அந்த முறையில் குழந்தை யார் வயிற்றில் வளர்கிறதோ அவர்களே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார். ஆனால் இந்த முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது.
இரண்டாவது முறை ஐ.வி.எப் என்ற கருத்தரிப்பு முறை, இது தான் தற்போது இந்தியாவில் சட்ட ரீதியாக அனுமதிபெற்று செயல்பட்டு வருகிறது.
இந்த முறையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, வாடகை தாய் தேவைப்படாது. அப்படியே தேவைப்பட்டாலும் வாடகைத் தாயின் குழந்தையாக அவர்கள் இருக்க மாட்டார்கள் என்று விளக்கம் அளித்தார்.
இதனிடையே நயன்தாரா துபாயில் இருந்த தனது உறவுமுறை பெண்ணை வாடகை தாயாக நியமித்து,இரட்டை குழந்தைகளை பெற்றுக் கொண்ட நிலையில்,
அந்தக்குழந்தைகளுக்கு நயன்தாரா ரத்த உறவு தாயாக இருக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் விக்னேஷ் சிவன் அக்குழந்தைகளுக்கு தந்தை என்பதில் எந்த மாற்றமும் இல்லை.