நளினியின் கோரிக்கை ஏற்ற தமிழக அரசு , பரோல் நீடித்து உத்தரவு
நான்காவது முறையும் நளினியின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு நளினியின் கோரிக்கையில் நான்காவது முறையில் ஏற்றது தமிழக அரசு அவருக்கு மேலும் 30 நாட்கள் பரோலில் நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் தனிச் சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார் நளினி. இதே வழக்கில் அவரது கணவர் முருகனும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்த நிலையில் நளினியின் தாயார் பத்மாவதி அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக் கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என்று நளினி தமிழக அரசிடம் கோரிக்கை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.
அவரின் கோரிக்கையை ஏற்று பரோலை நீட்டித்தது தமிழக அரசு. இதுவரைக்கும் அடுத்தடுத்து 3 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று 27 ஆம் தேதி அன்று அவர் பரோல் முடிந்து சிறைக்கு திரும்ப இருந்தார்.
தற்போது நளினியின் தாயார் பத்மா தனது உடல்நிலையை காரணம் காட்டி நளினியின் பரோல் நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மனு அளித்திருந்தார். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு 4-வது முறையாக பரோலை நீட்டித்து உத்தரவிட்டிருக்கிறது. இதன்படி26.5. 2022 வரை 30 நாட்கள் நளினிக்கு வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.