தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி : உச்சநீதிமன்றம் உத்தரவு

By Irumporai Apr 11, 2023 05:20 AM GMT
Report

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 ஆர்எஸ்எஸ் பேரணி

தமிழகத்தில் ஆர்.எஸ் .எஸ் பேரணி நடத்துவதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்த பிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் எஸ் வழக்கு தொடர்ந்தது, இதில் நிபந்தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதி மன்றம் ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

தமிழ்நாட்டில் ஆர் எஸ் எஸ் பேரணிக்கு அனுமதி : உச்சநீதிமன்றம் உத்தரவு | The Supreme Court Rss Rally In Tamil Nadu

உச்சநீதிமன்றம்தீர்ப்பு

சென்னை உயர்நீதிமன்ற தீர்பை எதிர்த்து தமிழ்நாடு அரசின் சார்பாகப் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை நீதிபதிகள் வி.ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது அதன்படி தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்