பள்ளியில் ரவுடித்தனம் செய்த புள்ளிங்கோ....பொருட்களை அடித்து நொறுக்கி அட்டகாசம் - பதறிய ஆசிரியர்கள்

Tamil nadu
By Thahir Mar 09, 2023 07:48 AM GMT
Report

தருமபுரி அருகே அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகள் பள்ளியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ, மாணவிகள் 

தருமபுரி மாவட்டம் அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 40 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் கடந்த வாரம் அரசு பொதுத்தேர்வு எழுதும் பிளஸ்-1, பிளஸ் - 2மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது.

இந்த தேர்வுகள் முடிவடைந்ததை தொடர்ந்து பள்ளி மாணவ - மாணவிகள் ஒரு வகுப்பறையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

The students are having a blast smashing things

அப்போது சில மாணவர்கள் வகுப்பறையில் இருந்த மேஜை, நாற்காலிகள் துாக்கி வீசினர். மேலும் கையில் கிடைத்த கட்டையால் மின்விசிறிகள், சுவிட்ச் போர்டு ஆகியவற்றை அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்துள்ளனர்.

சஸ்பெண்ட் செய்த கல்வித்துறை 

மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இச்சம்பவம் பற்றி அறிந்த பள்ளி, தலைமை ஆசிரியர், ரகளையில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து நடந்த சம்பவங்களை கூறியுள்ளனர்.

இதையடுத்து பொருட்களை அடித்து நொறுக்கிய மாணவ, மாணவிகளை அழைத்து இனி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடமாட்டோம் என்று மாணவ - மாணவிகளிடம் எழுதி வாங்கப்பட்டது.

மாணவிகள் வகுப்பறையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கப்படும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.

இதையடுத்து வகுபறையில் பொருட்களை சேதப்படுத்திய விவகாரத்தில் 5 மாணவர், மாணவிகளை 5 நாள் இடைநீக்கம் செய்து கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.