அம்மனுக்கு பாடையில் பிணமாக வந்து காணிக்கை செலுத்திய பக்தர்!

Salem Person goddess paidtribute அம்மன் காணிக்கை பிணம்
By Thahir Apr 09, 2022 11:37 AM GMT
Report

சேலம் அருகே பக்தர் ஒருவர் பாடையில் பிணம் போல வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்திய நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம்,ஜாரி கொண்டலாம்பட்டியில் மாரியம்மன்,காளியம்மன் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் பக்தர் ஒருவர் தனது வேண்டுகோளை செலுத்துவதற்காக பாடையில் பிணமாக வந்தார்.

இதற்காக கொண்டலாம்பட்டியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பந்தல் அமைத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் பக்தர்க்கு செய்யப்படும் அனைத்து சடங்குகளும் செய்யப்பட்டன.

பின்பு துக்க நிகழ்வில் கலந்து கொள்வது போல உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பாடையில் எடுத்து வரப்பட்ட பக்தரின் உடல் தெரு தெருவாக கொண்டு செல்லப்பட்டது.

மேலும் மயானத்திற்கு கொண்டு சென்ற போது சடலத்திற்கு பதில் பாடையில் இருந்த கோழியை மண்ணுக்குள் புதைத்தனர். பின்னர் கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.